Sunday, February 16, 2014

கவனிப்பாரற்றுக் கிடக்கும் கடுவெளி சித்தர் ஜீவ சமாதி..!

கவனிப்பாரற்றுக் கிடக்கும் கடுவெளி சித்தர் ஜீவ சமாதி..!

வெட்டவெளியினை தியானித்து சித்தி பெற்றவர் ஸ்ரீ கடுவெளி சித்தர்.அவரது ஜீவ சமாதி காஞ்சிபுரத்தின் மையப் பகுதியிலே, ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருகோவிலில் இருந்து சிறிது தொலைவிலே, இஸ்லாமிய மக்கள் மிகுந்து வாழக் கூடிய பகுதியிலே கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.
முற்காலத்திலே இந்த இடத்திலே பெரிய சிவாலயமும், இந்த ஜீவ சமாதியைச் சுற்றி, மேலும் பல சமாதிகளும் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது, இந்த ஆலயம் முற்றிலும் அழிக்கப் பட்டு, பிற சமாதிகளும் அழிக்கப் பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், இந்த கடுவெளி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள சிவ லிங்கத்தினை மட்டும்,யானையைக் கொண்டு இழுத்தும் அசைக்க முடியவில்லை எனவும் கூறுகின்றனர். நீண்ட கால போராட்டங்களுக்குப் பிறகு, இன்று இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்தைச் சுற்றி சிறிய அளவிலே இடத்தை மீண்டும் கையகப்படுத்தி, முள் வேலி அமைத்துள்ளனர் உள்ளூர் அன்பர்கள்.

வெட்டவெளியினை தியானித்து சித்தியானதால்தான் இன்று கடுவெளி சித்தரின் ஜீவ சமாதி கூட இன்று வெட்ட வெளியிலேயே இருக்கிறதோ? அந்த ஈசனே அறிவார்.

No comments:

Post a Comment