Friday, September 14, 2012

காரட்- 19


கேரட்காரட்காரட்



காரட் சாறு கண்ணின் கருமணிகளை அருமையாய் காத்திடும். இனிப்பான காரட் குழந்தைகளின் பிரியமான உணவு. சிவப்பானது. இதுஎல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. காய்கறிகளில் காரட் ஒரு நிலையான மதிப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பல இடங்களில் காரட் மட்டுமே உணவாக பல மனிதர்கள் சாப்பிடுகின்றனர். 



மருத்துவக் குணங்கள்:

காரட் கண்களைப் பாதுகாத்தலில் முதல் இடம் பெறுகிறது.
மாலைக்கண் நோய் விலகும், பற்கள் பலம் பெறும்.
உடல், முகம் அழகு பெறும்.

புற்று நோயைக் குறைப்பதில் பச்சைக்காரட்டும், காரட் சாறும், அதிவேக மருந்தாக மனிதருக்குப்பயன்படுகிறது.

எளிதில் ஜீரணம், சிறுநீரகப் பாதை எரிச்சல், உடல் நீர் குறைவு இவைகளை செய்கிறது.

வாயுத் தொல்லை, மூட்டுவலி, ஈரல்பிரச்சனை, மாதவிடாய் தொல்லை உடல் சூடு, மலக்கட்டு.

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.

கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.

இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

No comments:

Post a Comment