Friday, September 14, 2012

மூளை சுறுசுறுப்படைய - 33

இலந்தை பழம்கருப்பட்டிஇலந்தை பழம்





இலந்தை பழத்தை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகிவர மூளை சுறுசுறுப்பாகும்.

அறிகுறிகள்:


மூளை சோர்வு உண்டாதல்.

தேவையானப் பொருட்கள்:
இலந்தைப்பழம்.
கருப்பட்டி.

செய்முறை:

இலந்தை பழத்தை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகிவர மூளை சுறுசுறுப்பாகும்ளை சுறுசுறுப்பாகும்.

மூளை நரம்பு பலம் பெற‌ - 32

நாயுருவிநாயுருவி வேர்நாயுருவி வேர்





நாயுருவி வேர் மற்றும் கரிசலாங்கன்னி வேர் இரண்டின் சாறையும் கலந்து பருக மூளை சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும் 




அறிகுறிகள்:
மூளை நரம்பு சம்பந்தமான நோய்கள்.
மறதி.

தேவையான பொருட்கள்:
நாயுருவி வேர்.

அவல் பொங்கல் - 31

அவல்பாசிப்பயிறுவெல்லம்



தேவையான பொருட்கள்:

அவல் – 1/2 கிலோ
வெல்லம். – 1/2 கிலோ
பாசிப்பயிறு. – 150 கிராம்
ஏலக்காய். – 6
உலர்ந்த திராட்சை பழம். – 20
தேங்காய் பால் – 1 டம்ளர்(200 மி.லி)
பால்.- 1 டம்ளர்(200 மி.லி)
தேங்காய். – (சில் பொடியாக நறுக்கியது) 1 கப்
நெய் – 100 கிராம்
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.
வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்த அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.
நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை பழம், வறுத்த மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி விடவும்.நெய் மணத்துடன் கமகமக்கும் சுவையான அவல் பொங்கல் தயார்.

மருத்துவக் குணங்கள்:

அவலை குழைய வேக வைத்து உட்கொள்ள கழிச்சல், வயிற்று வலி தீரும்.
அவலில் பாலும், நெய்யும் சேர்த்து உண்ண உடலுக்கு வலிமை உண்டாகும்.

கோதுமை ரவா உப்புமா - 30

வெங்காயம்காய்ந்த மிளகாய்கோதுமை ரவா




தேவையானப்பொருட்கள்:

கோதுமை ரவா - 1 கப்
பெரிய வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி – ஒரு சிறு துண்டு
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளிக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் கோதுமை ரவாவைப் போட்டு, சற்று நிறம் மாறும் வரை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணையை விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கிள்ளிய மிளகாய் ஆகியவற்றைப்போட்டு, பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், 2 கப் தண்ணீரும், உப்பும் சேர்த்துக் கலக்கி மூடி வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ரவாவைக் கொட்டிக் கிளறவும். அடுப்பைத் தணித்து, மூடி வைத்து வேக விடவும். அவ்வப்பொழுது, திறந்து கிளறி விட்டு, நீர் வற்றி உப்புமா நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.

உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட் - 29

உருளைக்கிழங்குபசலைக்கீரைஓமம்



தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு = அரை கிலோ
பச்சை மிளகாய் = 6
பசலைக்கீரை = 1 கட்டு
ஓமம் = அரை ஸ்பூன்
தயிர் = 200 கிராம்
இஞ்சி = அரை அங்குலம்
தக்காளி = 2
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை தோலை சீவிக் கொண்டு துருவிக் கொள்ளவும்.
பசலைக்கீரைகளை ஆய்ந்து நரம்பு நீக்கவும். இஞ்சியை தோலை நீக்கி விட்டு துருவவும். தக்காளியை நறுக்கவும்.
இவை எல்லாவற்றையும் உப்பு, ஓமம் சேர்த்து தண்ணீர் தெளித்து குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். இதை மேலும் சிறிது மசித்துக் கொண்டு தயிர் சேர்க்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு ஸ்பினாச் சாலட் தயார். இதை ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், தோசை போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

காய்கறி சாலட் - 28

வெள்ளரிக்காய்வெங்காயம்காரட்



தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
காரட் – 1
புதினா இலை – சிறிது
கொத்தமல்லி இலை – சிறிது
எலுமிச்சம் பழச்சாறு – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு

செய்முறை:

வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித்துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி விட்டு (நீக்கியப் பகுதியை சாம்பார் அல்லது ரசத்தில் சேர்க்கலாம்) மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், புதினா, கொத்துமல்லி இலைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய காய்கறி துண்டுகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கிளறி விடவும். பின்னர் அதில் எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து மீண்டும் ஒரு முறைக் கிளறி, அதன் மேல் காய்கறித்துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும். (அலங்காரம் இல்லாமலும் இந்த சாலட் சாப்பிட சுவையாகவே இருக்கும்).

அரச மரம் -27

அரச மரம்அரச மர இலைஅரச மர கொழுந்து



மருத்துவக் குணங்கள்:

அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.

நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.

அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்.

நூல்கோல் வடை - 26

நூல்கோல்இஞ்சிபொட்டுக்கடலை மாவு



தேவையான பொருட்கள்:
நூல்கோல் – 2
பொட்டுக்கடலை மாவு – 1 கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம் – 3
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு - 10 பல்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1/4 கப்
கடுகு – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

நூல்கோலை தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து நறுக்கிய எல்லாவற்றையும் அதில் கொட்டி உப்பு சேர்க்கவும்.
நூல்கோலையும் அதில் சேர்த்து தண்ணீர்விடாமல் வதக்கி, காய் வெந்ததும் பொடித்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்.
இதில் கொத்துமல்லித்தழையைப்பொடியாக நறுக்கிப்போட்டு காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டி போட்டு, சிவக்க வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

மருத்துவக் குணங்கள்:

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் நூக்கோலைச் சாப்பிட்டு வரலாம். இதில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது.
நூக்கோல் ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.

கேரட் அல்வா - 25

கேரட்பால்குங்குமப்பூ

தேவையான பொருட்கள்:


பெரிய கேரட் – 1/4 கிலோ
சர்க்கரை – 200 கிராம்
பால்- 1/2 லிட்டர்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 10 – 15
கிஸ்மிஸ் பழம் – 2 டீஸ்பூன்
ஏலப்பொடி – 1 பின்ச்
குங்குமப்பூ – சிறிது

செய்முறை:
கேரட்டை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு கேரட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
1 டீஸ்பூன் நெய்யை வாணலியில் விட்டு கேரட் துருவலை பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் பாலை பாதியாக குறுகும் வரை காய்ச்சவும்.
வதக்கிய கேரட்டில் பாலை சேர்த்துக் கிளறவும். ஓரளவு பால் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
சிறிது, சிறிதாக நெய் விட்டுக்கிளறவும். ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்துக்கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் கிஸ்மிஸ் பழம், முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இப்பொழுது சுவையான கேரட் அல்வா ரெடி.

மருத்துவக் குணங்கள்:

குடல்புண் (அல்சர்), வயிற்று வலி போன்றவர்களுக்கு கேரட் சாறு பயன்படுகிறது.

வாரத்திற்கு ஐந்து நாட்கள் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் குறையும்.

நார்ச் சத்து அதிகம் உள்ளதால், ஜீரண சக்தியை தூண்டி, உணவை செரிக்க வைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது கேரட்.

நந்தியாவட்டை - 24

நந்தியாவட்டைநந்தியாவட்டைநந்தியாவட்டை


மருத்துவக் குணங்கள்:

நந்தியாவட்டை ஒரு செடியினம். இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும். இதன் பூக்கள் வெந்நிறமாக இருக்கும். மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும் காணப்படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளரக் கூடியது. இதன் பிறப்பிடம் வட இந்தியா. இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகுப் பூஞ்செடியாக வளர்க்கிறார்கள். இது 3 – 5 அடி உயரங்கூட வளரும். இது முக்கியமாக கண் நோயிக்கான மருந்தாகப் பயன்படும். இனப் பெருக்கம் விதைகள் மூலமும் கட்டிங் மூலமும் செய்யப்படுகின்றது.

நந்தியாவட்ட வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்படுகின்றது. இதை நிறதிற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள்.

நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும்.
இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும். இதன் வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும். 

இதன் பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ எடுபடும். 

செண்பகப்பூ 60, கார் எள்ளுப்பூ 100, நந்தியாவட்டப் பூ 100 இவற்றைச் சுத்தமாக தூசி மண் முதலியவை இல்லாமல் இதழ்களைச் சுத்தமான கல்வத்தில் போட்டு அதனுடன் துளசி வேர், சங்குப் பொடி, மயில் துத்தமை கழஞ்சி 2, கூட்டிப் புளியம் பூச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாற்றிலுமாக அடைத்துப் பல்பக் குச்சை போல் திரட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு தாய்பாலில் உரைத்துக் கண்களுக்குத் தீட்டி வரக் கண்வலி, பூவீழ்தல், சதைவாங்கி முதலியன நீங்கும்.

பாகற்காய் ஊறுகாய் - 23

பாகற்காய்எலுமிச்சம்பழம்மஞ்சள்



தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 2.
எலுமிச்சம்பழம் – 4.
உப்பு -ஒரு டீஸ்பூன்.
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்.
பச்சை மிளகாய் -10.

செய்முறை:

பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும்போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும்.

பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆறவிடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும். பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அருமையான இன்ஸ்டன்ட் ஊறுகாய் கிடைக்கும்.

பயன்:

வயிற்றில் பூச்சிகள் இருந்தால், முகம், கை, முதுகு போன்ற இடங்களில் தேமல் வரும். கண்ணிமையில் உள்ள முடி, சரியாக வளராமல் ஒட்டிக்கொள்ளும். இந்த ஊறுகாய் சாப்பிட்டால், பூச்சிகள் அழியும். தேமல் மறைவதோடு, இமை முடி நன்கு வளரும்.

முளைக்கட்டிய பயறு சுண்டல் - 22

முளைக்கட்டிய பயறுதேங்காய்மிளகாய்



தேவையானப்பொருட்கள்:

முளைக்கட்டிய பயறு – 1 கப் (வேக வைத்தது)
மிளகாய் – 2
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
எலுமிச்சம் பழச்சாறு – சிறிது
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு



செய்முறை:
ஒரு கப் பச்சை பயிறை தண்ணீரில் குறைந்தது 12 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி களைந்து எடுத்து, ஒரு மெல்லிய வெள்ளைத்துணியில் போட்டு, சிறு மூட்டை போல் முடிந்து, சற்று உயரமான இடத்தில் கட்டி மீண்டும் ஒரு 12 மணி நேரம் தொங்க விடவும். பின்னர் மூட்டையை அவிழ்த்துப் பார்த்தால் பயறு நன்றாக முளை விட்டிருக்கும். (குளிர் பிரதேசங்களில், பயறு முளை விட அதிக நேரமாகும். 

அந்த இடங்களில் வசிப்பவர்கள், மூடடையின் மேல் அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து விட்டு, மேலும் 10 அல்லது 12 மணி நேரம் வைத்திருக்கவும். அல்லது அந்த மூட்டையை, ஒரு பாத்திரத்திக்குள் வைத்து, மூடாமல் வைத்திருந்தாலும், முளை விடும்).

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் மிளகாய் (ஒன்றிரண்டாகக் கிள்ளி போடவும்), பெருங்காய்த்தூள்,
கறிவேப்பிலைச் சேர்த்து வறுத்து, அத்துடன் பயறு, உப்பு போட்டுக் கிளறி விடவும் 
கடைசியில் எலுமிச்சம் சாறு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

வில்வம்- 21

வில்வம்வில்வம்வில்வம்



மருத்துவக் குணங்கள்:

வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. கனி தொடர்பான, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும். இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும். பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியன ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம். இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். 

வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். 

பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். 
தொத்து வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். 

பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.

இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.

பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.

பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.

பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.

வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.

நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.

இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் தேய்த்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது உடலுறவு கூடாது.

வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.

வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.

வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.

வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.

ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும்.

வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.

வில்வ வேரை 10 – 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர விந்துவைப் பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும்.

துளசி - 20

துளசிதுளசிதுளசி



மருத்துவக் குணங்கள்:

தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. 

துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. 

வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். 

உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும்.

இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும்.

மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.

தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். 

வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. 

துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

காரட்- 19


கேரட்காரட்காரட்



காரட் சாறு கண்ணின் கருமணிகளை அருமையாய் காத்திடும். இனிப்பான காரட் குழந்தைகளின் பிரியமான உணவு. சிவப்பானது. இதுஎல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. காய்கறிகளில் காரட் ஒரு நிலையான மதிப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பல இடங்களில் காரட் மட்டுமே உணவாக பல மனிதர்கள் சாப்பிடுகின்றனர். 



மருத்துவக் குணங்கள்:

காரட் கண்களைப் பாதுகாத்தலில் முதல் இடம் பெறுகிறது.
மாலைக்கண் நோய் விலகும், பற்கள் பலம் பெறும்.
உடல், முகம் அழகு பெறும்.

புற்று நோயைக் குறைப்பதில் பச்சைக்காரட்டும், காரட் சாறும், அதிவேக மருந்தாக மனிதருக்குப்பயன்படுகிறது.

எளிதில் ஜீரணம், சிறுநீரகப் பாதை எரிச்சல், உடல் நீர் குறைவு இவைகளை செய்கிறது.

வாயுத் தொல்லை, மூட்டுவலி, ஈரல்பிரச்சனை, மாதவிடாய் தொல்லை உடல் சூடு, மலக்கட்டு.

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.

கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.

இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கீரை கட்லட் - 18

தக்காளிகீரைவெங்காயம்



தேவையானப்பொருட்கள்:

கீரை- 1 கட்டு (எந்த கீரையையும் பயன்படுத்தலாம்)
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
கடலை மாவு – 1 கப்
உப்பு- 1 டீஸ்பூன் அல்லது தங்கள் சுவைக்கேற்றவாறு
நல்லெண்ணெய் - 5 முதல் 6 டேபிள்ஸ்பூன் வரை

செய்முறை:

கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி பின்னர் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 அல்லது 3 டீஸ்பூன் எண்ணை விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். அத்துடன் தக்காளியைச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். 

கடைசியில் நறுக்கி வைத்துள்ளக் கீரையைப் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி விடவும். கீரை சற்று ஆறியதும் அத்துடன் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பிசையவும். கைகளைத் தண்ணீரில் தொட்டுக் கொண்டு (அப்பொழுதுதான் கைகளில் ஒட்டாமல் இருக்கும்) எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டி பின்னர் சற்று அழுத்தி வடை போல் தட்டிக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை விட்டு தேய்த்துக் கொள்ளவும். அதில் தட்டி வைத்திருக்கும் கட்லட்டை (4 அல்லது 5 அல்லது கல்லில் இடம் இருக்கும் வரை) ஒன்றுடன் மற்றொன்று படாமல் வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். 

கட்லட்டைச் சுற்றி 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணை விடவும். ஒரிரு நிமிடங்கள் பொறுத்து, தோசைத் திருப்பியால் திருப்பி விட்டு, மீண்டும் சிறிது எண்ணையை சுற்றி விட்டு வேக விடவும். கட்லட் நன்றாக இருபுறமும் சிவக்கும் வரை திருப்பி திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.

இதை எந்த வித சாத வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். ரசம், மற்றும் சாம்பார் சாதத்துடன் தொட்டுக் கொள்ள மேலும் சுவையாக இருக்கும்.

சிறுகீரை சூப் - 17

சிறுகீரைவெங்காயம்தக்காளி



தேவையான பொருள்கள்:

சிறுகீரை = 1 கட்டு
சீரகம் = 1 ஸ்பூன்
வெங்காயம் = 1
தக்காளி = 2
இஞ்சி = சிறிது
அரிசி மாவு = 2 ஸ்பூன்
வெண்ணெய் = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

சிறுகீரைகளை வாங்கி கீரையை ஆய்ந்து எடுத்து விட்டு வெறும் காம்பு, வேர் பகுதியை மட்டும் நன்றாக அலம்பி விட்டு எடுத்துக் கொள்ளவும்.
இதை சிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது நறுக்காமலோ 6 கப் தண்ணீர் விடவும்.

தக்காளி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவும். சீரகம் மற்றும் அரிசி மாவு சேர்க்கவும்.
இதை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 10 நிமிடம் வைக்கவும். பிறகு எடுத்து வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து சுட சுட பரிமாறலாம்.

சுவையான சிறுகீரை சூப் தயார். அருந்துவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு:

வெண்ணெய் சேர்க்க பிடிக்கா விட்டால் தவிர்த்து விடலாம்.

மருத்துவக் குணங்கள்:

சிறுக்கீரையில் புரதம், மாவுப்பொருள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் கலோரிகள் உள்ளது.
இதனால் மலச்சிக்கல் குறையும்.
கண் எரிச்சல், கண் கட்டி, கண் காசம் போன்றவை குறையும்.
மலேரியா, டைஃபாய்டு, நீரிழிவு, உடல் பருமன், உடல் வீக்கம், உடல் சூடு போன்ற நோய்கள் குறையும்.